Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நாகையில் குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்

Print PDF

தினகரன்      26.05.2010

நாகையில் குடிநீரை சுத்திகரித்து வழங்க வேண்டும்

நாகை, மே 26: நாகையில் குடிநீரை சுத்திகரித்து மக்களுக்கு வழங்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க மாவட்ட பேரவை கூட்டம் தலைவர் நடராஜன் தலைமையில் நடைபெற்றது. வட்டத்தலைவர் நமச்சிவாயம் வரவேற்றார்.

மாவட்ட செயலாளர் எம்.ஆர்.சுப்பிரமணியன் வேலை அறிக்கை, பொருளாளர் முருகேசன் நிதி நிலை அறிக்கை வாசித்தனர். நாகை தொழிற்சங்க கூட்டமைப்பின் பொது செயலாளர் தனசேகரன், அரசு ஊழியர் சங்க மாநில துணைத் தலைவர் சிவக்குமார், மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், வட்டத்தலைவர் அன்பழகன், மாநில செயலாளர் வேலு பேசினர்.

கூட்டத்தில், நாகை நகராட்சியில் குடிநீரை சுத்திகரித்து வழங்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிப்பாளையம் ரெயில் நிலையத்தில் பிளாட்பாரத்தை உயர்த்தி கட்ட வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் வேதாரண்யம் வட்டத்தலைவர் நாராயணன் நன்றி கூறினார்.