தினமணி 27.05.2010
தண்ணீரை காய்ச்சிக் குடிக்க வேண்டுகோள்
பழனி, மே 26:பொதுமக்கள் குடிநீரை நன்கு காய்ச்சிக் குடிக்குமாறு பழனி நகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
இதுகுறித்து நகராட்சி ஆணையர் மூர்த்தி, நகர்மன்றத் தலைவர் இராஜமாணிக்கம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மழைக்காலத்தை முன்னிட்டுகுடிநீர் விநியோகத்தின்கீழ் 6 மேல்நிலைத் தொட்டிகளும், பாலாறு, பொருந்தலாறு அணை மற்றும் கோடைகால நீர்த்தேக்க சுத்திகரிப்பு மற்றும் பிரதானக் குழாயைச் சுத்தம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. 32 சதம் குளோரின் நீரில் கலக்கப்பட்டு, கடைசி பயன்பாட்டில் 0.2 சதம் குளோரின் உள்ளவாறு அளவு கண்காணிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் தண்ணீரை நன்கு காய்ச்சி குடிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.