தினகரன் 28.06.2010
மயிலாடுதுறை குடோன்களில் கார்பைடு மாம்பழம் 400 கிலோ பறிமுதல்
மயிலாடுதுறை, மே 28: மயிலாடுதுறை நகரில் உள்ள குடோன்களில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோத னையில் 400 கிலோ கார் பைடு மாம்பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
மயிலாடுதுறையில் மாம் பழ சீசன் தொடங்கியுள்ளது. கார்பைடு கல் வைத்து மாம்பழங்களை பழுக்க வைப்ப தாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மயிலாடுதுறை நகராட்சி ஆணையர் மோ கன் உத்தரவின்பேரில் நகர்மன்ற தலைவர் லிங்கராஜன் அறிவுரையின்படி சோதனை நடத்தப்பட்டது. நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர் (பொ) அறிவழகன் தலைமை யில் சுரேஷ், ராமையன், டேவிட், ராதாகிருஷ்ணன், பிச்சமுத்து மற்றும் நகராட்சி ஊழியர்கள் மயிலாடுதுறை காய்கறி மார்க்கெட்டிற்குள் இருக்கும் மாம்பழ குடோன் கள் உள்ளிட்ட 7 குடோன்களில் ஆய்வு மேற்கொண்டனர். கார்பைடு கல் வைத்து பழுக்கவைத்த 400 கிலோ மாம்பழங்களையும், ஒரு கிலோ கார்பைடு கற்க ளும் கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட பழத்தின் மதிப்பு ரூ.20,000 என அதிகாரிகள் தெரிவித்தனர்.
நகராட்சி சுகாதாரப்பிரிவு அலுவலர் (பொ) அறிவழகன் கூறுகையில், கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கும்போது அந்தக் கல்லிலிருந்து வெளியாகும் அசிட்டிலின் வாயுவால் காய்கள் உடனடியாக பழுக்கும். அந்த பழங்களை சாப்பிட்டால் வாந்தி, பேதி, குடல் புண் போன்ற வியாதிகள் ஏற்படும். இத்தகைய பழங்கள் சாம்பல் பூத்தது போல் இருக்கும். பொதுவாக பழங்களை சுத்தமாக கழுவி சாப்பிடவேண்டும். கார்பைடு கல் வைத்து பழுக்க வைத்தாலோ, இதுபற்றி சந்தேகம் ஏற்பட்டாலோ உடனே மயிலாடுதுறை நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கவும் என்றார்.