Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரில் கழிவு நீர் கலப்பு: சரிப்படுத்திய ஊழியர்கள்

Print PDF

தினமணி    31.05.2010

குடிநீரில் கழிவு நீர் கலப்பு: சரிப்படுத்திய ஊழியர்கள்


சிவகங்கை, மே 30: சிவகங்கை காந்தி வீதியில் குடிநீரில் சாக்கடைக் கழிவுநீர் கலந்ததை அறிந்த ஊழியர்கள் அதைச் சரிசெய்தனர். காந்தி வீதி-ஆசிரியர் சோமசுந்தரம் தெரு சந்திப்பில் சாக்கடைக் கழிவு நீர் செல்வதற்கான பாலம் அமைக்க குழி தோண்டப்பட்டுள்ளது. இந்த வழியாகச் செல்லும் காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, அதன் வழியாக சாக்கடை நீர் கலந்து குடிநீரில் வருவது தெரியவந்தது.

இதுதொடர்பாக தினமணியில் சனிக்கிழமை செய்தி வெளியானது. இந் நிலையில், நகராட்சி கவுன்சிலர் விஜயகுமார் ஏற்பாட்டின்பேரில், நகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய ஊழியர்கள் அந்த இடத்திலிருந்து கழிவுநீரை அகற்றிவிட்டு குடிநீர் குழாய் உடைப்பைச் சரிசெய்தனர். இதன்பிறகு குடிநீர் வழக்கம்போல் தூய்மையாகக் கிடைத்து வருகிறது என அப் பகுதி மக்கள் தெரிவித்தனர்.