தினகரன் 01.06.2010
அல்லி கண்மாய் மயானப் பகுதியில் குப்பைகள் அகற்றம்
ராமநாதபுரம், ஜூன் 1: ராமநாதபுரம் நகராட்சிக்கு உட்பட்ட அல்லி கண்மாயில் உள்ள மயானப் பகுதியில் நேற்று குப்பைகளை அகற்றும் பணி நடந்தது.
இந்த மயானப் பகுதியில் சிலர் தள்ளுவண்டி மூலம் குப்பைகளை கொட்டி வந்தனர். இதனால் அந்தப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியது. அப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு காய்ச்சல், வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இறந்தவர்களை அடக்கம் செய்ய வருபவர்களும் புகார் கூறி வந்தனர். மயானத்தை சுத்தம் செய்ய நடவ டிக்கை எடுக்க வேண் டும் என்று நகர்மன்ற கூட்டத்தில் கவுன்சிலர்களும் வலியுறுத்தினர். இதையடுத்து நகர்மன்ற தலைவர் லலிதகலாரத்தினம் மயானப்பகுதியை பார்வையிட்டார்.
குப்பைகளை உடனடியாக அப்புறப்படுத்துமாறு நகராட்சி ஊழியர்களுக்கு உத்தரவு பிறப்பித்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் சந்திரன் தலைமையில் நகராட்சி ஊழியர்கள் நேற்று அப்பகுதியில் குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.