Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள்

Print PDF

தினமணி 02.06.2010

குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி நிர்வாகம் வேண்டுகோள்

திருத்தணி, ஜூன் 1: திருத்தணி நகராட்சியில் குடிநீரை காய்ச்சி குடிக்குமாறு நகராட்சி தலைவர் எஸ். பாமாசந்திரன் அறிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: திருத்தணி நகராட்சி பகுதியில் உள்ள 21 வார்டுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்யும் மேல்நிலை நீர்தேக்க தொட்டி, பெரியார் நகர், இந்திரா நகர், முருகப்பா நகர், சித்தூர் சாலையில் உள்ள நீர்நிலை தொட்டிகள், கிணறுகள் அனைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டியும் சுத்தம் செய்யப்பட்டுள்ளது.

அதேவேளை, மழைக்காலத்தில் சுகாதார கேடுகளை தவிர்க்கவும், குடிநீர் வழியாக எவ்வித நோய், வயிற்றுப்போக்கு பிரச்னை வராமல் இருக்கவும் தண்ணீரை கொதிக்க வைத்து பயன்படுத்த வேண்டும் என அவர் அறிவித்துள்ளார்.