Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்: நகராட்சி வேண்டுகோள்

Print PDF

தினமலர் 03.06.2010

குடிநீரை காய்ச்சி குடியுங்கள்: நகராட்சி வேண்டுகோள்

திருவள்ளூர் : திருவள்ளூர் நகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், குடிநீரை காய்ச்சி பருகவேண்டும் என, நகராட்சி கேட்டுக்கொண்டுள்ளது.திருவள்ளூர் நகராட்சி பகுதியில், பொதுமக்களின் குடிநீர் வசதிக்காக மொத் தம் 13 மேல் நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள் அமைக்கப்பட்டு செயல் பாட்டில் உள்ளது. இதன் மூலம், திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் வசித்து வரும் பொதுமக்களுக்கு, இவற்றின் மூலம் தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.திருவள்ளூர் நகராட்சியில் குடிநீர் உப விதிகளின்படி, நகராட்சியில் உள்ள மேல் நிலை குடிநீர் தேக்கத் தொட்டிகள் சுத்தம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், குடிநீர் பகிர்மான முறையில் குளோரினேசன் முறையில் பராமரிக்கப் பட்டு வருகிறது.நகரில் வீரராகவசுவாமி திருக்கோவில் உள்ளதால், திரளான வெளியூர் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் வந்து செல்கின்றனர். இதனால் பாதுகாப்பு நலன் கருதி, பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி பருகும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது.