Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரமற்ற இறைச்சி சிக்கியது

Print PDF

தினமலர்    03.06.2010

சுகாதாரமற்ற இறைச்சி சிக்கியது

சென்னை : நந்தனம், எஸ்.எம்., நகரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த, 60 கிலோ பன்றி இறைச்சி சுகாதாரத்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.கண்ணம்மாபேட்டை, நியூ போக் சாலையில் சாலையோரம் சுகாதாரமற்ற முறையில், விற்பனை செய்யப்பட்டு வந்த மீன் கடைகள் அப்புறப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.ராயப்பேட்டை, ஜானி ஜான் கான் சாலையில் சென்னை மாநகராட்சியின் உரிமம் இன்றி ஆடுகளை வெட்டி விற்பனைக்கு அனுப்புவதாக புகார் வந்தது. சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு செய்து 20 கிலோ எடையுள்ள ஆட்டிறைச்சியினை பறிமுதல் செய்து, கிருமி நாசினி தெளித்து, அழித்தனர்.அதேபோல், நந்தனம், எஸ்.எம்., நகரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனை செய்யப்பட்டு வந்த 60 கிலோ பன்றி இறைச்சியை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.