Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரமில்லாமல் விற்ற பன்றி இறைச்சி பறிமுதல்

Print PDF

தினகரன் 03.06.2010

சுகாதாரமில்லாமல் விற்ற பன்றி இறைச்சி பறிமுதல்

சென்னை, ஜூன் 3: நந்தனம், சத்தியமூர்த்தி நகரில் சுகாதாரமற்ற முறையில் விற்பனைக்கு வைத்திருந்த 60 கிலோ பன்றி இறைச்சியை மாநகராட்சி அதிகாரிகள் நேற்று பறிமுதல் செய்து அழித்தனர்.

மேலும், கண்ணம்மாபேட்டை, நியூ போக் சாலை ஆகிய இடங்களில் சாலையோரம் சுகாதாரமற்ற முறையில் இயங்கிய மீன் கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டு, கிருமி நாசினி தெளிக்கப் பட்டது.

ராயப்பேட்டை, ஜானி ஜான்கான் சாலையில் மாநகராட்சி உரிமம் இன்றி ஆடுகளை வெட்டி விற்பனைக்கு அனுப்புவதாக புகார் வந்தது. இதையடுத்து 111, 107 மற்றும் 107 வார்டுகளின் சுகாதார ஆய்வாளர்கள் நேற்று அங்கு சோதனை நடத்தி 20 கிலோ ஆட்டிறைச்சியை பறிமுதல் செய்து அழித்தனர்.