தினமலர் 07.06.2010
குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி வேண்டுகோள்
செங்கல்பட்டு : பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரவு வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து செங்கல்பட்டு நகராட்சி கமிஷனர் திருநாவுக்கரசு கூறியதாவது:செங்கல்பட்டு நகராட்சி குடிநீர் உபவிதிகளின்படி நகராட்சியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள், தரைத்தளத் தொட்டிகள் மற்றும் தலைமை நீரேற்று நிலைய தொட்டிகள் 15 நாட்களுக்கு ஒரு முறை சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.மேலும், குடிநீர் பகிர்மான முனையில் 0.20 பி.பி.எம்., முதல் 0.50 பி.பி.எம்., வரை குளோரின் அளவு பராமரிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் பாதுகாப்பு நலன் கருதி பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.