Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

க.புதுப்பட்டியில் குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை

Print PDF

தினமலர் 08.06.2010

.புதுப்பட்டியில் குளோரின் கலக்காமல் குடிநீர் சப்ளை

கம்பம்; .புதுப்பட்டியில் சப்ளை செய்யப்படும் குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்கப்படாமல் வினியோகம் செய்யப் படுவதாக புகார் எழுந் துள்ளது. .புதுப்பட்டி பேரூராட் சியில் 15 வார்டுகள் உள் ளன. இங்கு குடிநீர் சப்ளையில் நீண்ட நாட் களாக பிரச்னை இருந்து வருகிறது. கட்டப் பட்ட குடிநீர் மேல் நிலைத் தொட்டி ஒன்று பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் குடிநீரில் போதிய அளவு குளோரின் கலக்காததால், வயிற்றுப் போக்கு, காலரா ஏற்பட்டு பலர் பலியானார்கள். தற்போதும் க.புதுப்பட்டியில் குடிநீர் சப்ளையில் குளறுபடிகள் நடந்து வருகிறது. லோயர் கேம்பில் இருந்து வாரியம் மூலம் குடிநீர் 15 நாட்களுக்கு ஒரு முறை மட் டுமே சப்ளை செய்யப்படுகிறது. பேரூராட்சி நிர்வாகம் வயல்காட்டிற்குள் தோண்டியுள்ள கிணற்றில் இருந்து தண்ணீர் சப்ளை செய்கிறது. சுத்தப்படுத்தப் படாமலும், போதிய குளோரின் கலக்காமலும் குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது. இதனால் வயிற்றுப் போக்கு மற்றும் காலரா ஏற்படும் நிலை எழுந் துள்ளது. ஏற்கெனவே வயிற்றுப் போக்கு ஒரு சிலருக்கு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர். குளோரின் கலந்து குடிநீர் சப்ளை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.