தினகரன் 09.06.2010
மாம்பழ கடைகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு
கோவில்பட்டி, ஜூன் 9:கோவில்பட்டி நகராட்சி மார்க்கெட்டில் மாம்பழ கடைகளில் நகராட்சி சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
கோவில்பட்டி நகராட்சி பகுதியில் உள்ள மாம்பழ கடைகளில் உணவு ஆய்வாளர்கள் முத்துகுமார், வெங்கடேசன் மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் நேற்று ஆய்வு செய்தனர். கோவில்பட்டி நகராட்சி மார்க்கெட் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட நகராட்சி அதிகாரிகள் கடைகளில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாம்பழங்கள் இயற்கையான முறையில் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா? அல்லது ரசா யன முறையின் மூலம் பழுக்க வைக்கப்படுகிறதா? என ஆய்வு செய்தனர். அப் போது ரசா யண பொருள்களை வைத்து மாம்பழங்களை பழுக்க வைக் காமல் இயற்கை முறையில் மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
மேலும் இந்த ஆய்வு பணி மாம்பழ சீசன் முடியும் வரை நடைபெறும். பொதுமக்கள் தங்கள் பகுதியில் ரசாயண முறையில் மாம்பழங்கள் பழுக்க வைத்து விற்பனை செய்வது தெரியவந்தால் நகராட்சியில் உள்ள உணவு ஆய்வாளருக்கு புகார் தெரிவிக்கலாம். வியாபாரிகள் சுத்தமான, தரமான மாம்பழங்களை விற்பனை செய்ய வேண்டும். இயற்கைக்கு முரனாக மாம்பழம் வேதியியல் முறையில் தயார் செய்து விற்பனை செய்தால் உணவு கலப்பட தடுப்பு சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி கமிஷனர் விஜயராகவன் தெரிவித்துள்ளார்.