Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மும்பையில் 8 வார்டுகளில் மலேரியாவுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

Print PDF

தினகரன் 09.06.2010

மும்பையில் 8 வார்டுகளில் மலேரியாவுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

மும்பை, ஜூன் 9: மும்பை யில் எட்டு வார்டுகளில் மலேரியாவிற்கு எதிரான நடவடிக்கையை தீவிரப் படுத்த மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய் துள்ளது.

மும்பையில் சில இடங்களில் மலேரியா காய்ச்சலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. எந்த பகுதியில் அதிக அளவு மலேரியாவின் தாக்கம் இருக்கிறது என்பது குறித்து மாநகராட்சியின் சுகாதாரத்துறை கணக் கெடுப்பு நடத்தியது. இதில் எப்’&வடக்கு,‘எப்’&தெற்கு, ‘ஜி’&வடக்கு, ‘ஜி’&வடக்கு, ‘எல்வார்டு, ‘எச்’&மேற்கு, ‘கே’&கிழக்கு மற்றும் போன்றவை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வார்டுகளில் மலேரியா பாதித்தவர்களை அடை யாளம் காண்பதற்கு சுகாதாரத்துறை ஊழி யர்களை மாநகராட்சி நிர்வாகம் ஏற்கனவே அனுப்பி இருக்கிறது. அதிக அளவு கட்டுமான பணிகள் நடந்து வரு வதாலும் குடிநீர் பற்றாக் குறை காரணமாக பொதுமக்கள் பாதுகாப்பின்றி குடிநீரை சேமித்து வைப்பதாலும் மலேரியா காய்ச்சல் அதிக அளவில் பரவுவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.