தினமணி 11.06.2010
கலப்பட பால் பறிமுதல்: நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ராசிபுரம்,ஜூன் 10: ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் கலப்பட பாலை நகராட்சி அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.
ராசிபுரம் நகராட்சிப் பகுதியில் பால் விற்பனையாளர்களிடம் நகராட்சி அலுவலர்கள் சோதனை நடத்தினர். நகராட்சி துப்புரவு அலுவலர் ஆர்.ராம்குமார், ஆய்வாளர்கள் ஏ.லோகநாதன், ஆர்.பாஸ்கரன், கே.பிரகாஷ் ஆகியோர் சோதனையிட்டனர்.
பாலில் கலப்படம் செய்து விற்பனை செய்வது தெரியவந்தது. 9 வியாபாரிகளிடம் இருந்து 120 லிட்டர் பாலை பறிமுதல் செய்தனர். பால் விற்பனையாளர்கள் முறையாக உரிமம் பெற்று விற்பனை செய்ய வேண்டும் என நகராட்சி ஆணையாளர் கு.தனலட்சுமி தெரிவித்துள்ளார்