தினகரன் 14.06.2010
மாநகராட்சி பகுதியில் கழிவுநீர் கால்வாய் தூர்வாரும் பணி தீவிரம்
பெங்களூர்
, ஜூன் 14:கழிவு நீர் கால்வாய்கள், மழை நீர் வடிகால் கால்வாய்கள் அடைத்துகொண்டு ஒழுகாமல் இருப்பதற்கும், இதனால் மக்கள் பாதிப்படையாமல் இருக்கும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று குடிநீர் வழங்கல் மற்றும் வினியோகத்துறையின் தலைவர் ராமமூர்த்தி தெரிவித்தார்.நிருபர்களிடம் அவர் கூறியதாவது
:மழை காலங்களில் சாலைகளில் உள்ள மேன்ஹோள்
, கழிவுநீர் கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் பெருக்கெடுத்து ஓடுவது, மழை நீர் தேங்குவது போன்ற பிரச்னைகளால் மக்கள் அவதிப்படாமல் இருப்பதற்கு ஏற்ற வகையில் சீர் செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.ஜனவரி முதல்
7,300 மேன்ஹோள்களின் பணிகள் நிறைவடைந்துவிட்டன. மழைநீர் சரளமாக செல்வதற்கும், கழிவுநீர் தடையின்றி செல்வதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.இதற்காக ஜெட்டிங் மிஷன்கள் பயன்படுத்தி
75 மழைநீர் கால்வாய்களில் தண்ணீர் எடுக்கப்பட்டது. பிரச்னைகளை சமாளிக்க கட்டுப்பாட்டு அறை 24 மணி நேரமும் செயல்படும். மல்லேஸ்வரம் &22945240, ஒசஹள்ளி&22945188, ஜெயநகர்&22945150, இந்திராநகர்&22945183 ஆகிய எண்களில் மக்கள் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.