Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ராஜபாளையம் நகராட்சி சார்பில் ஒரே இடத்தில் கூடி துப்புரவு பணி

Print PDF

தினகரன் 16.06.2010

ராஜபாளையம் நகராட்சி சார்பில் ஒரே இடத்தில் கூடி துப்புரவு பணி

ராஜபாளையம், ஜூன் 16: ராஜபாளையம் நகராட்சி சார்பில் அனைத்து வார்டுகளிலும் துப்புரவு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தனித்தனியாக ஏரியாக்கள் ஒதுக்கப்பட்டு துப்புரவு பணிகள் நடந்து வருகிறது. வாரத்தில் செவ்வாய்கிழமை அனைத்து துப்புரவு பணியாளர்களையும் ஒரே இடத்திற்கு வரவழைத்து அந்த பகுதியை மட்டும் துப்புரவு செய்யும் பணியை நகராட்சி தலைவி மகாலட்சுமி துவக்கி வைத்தார்.

இதையடுத்து ராஜபாளையம் புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் துப்புரவு பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டனர். கமிஷனர் காளிமுத்து, சுகாதார அலுவலர் இளங்கோ உள்பட பலர் கலந்து கொண்டனர்.