தினமணி 18.06.2010
தீவிர துப்புரவுப் பணி
அரூர், ஜூன் 17: அரூரை அடுத்த உடையானூரில் தீவிர துப்புரவுப் பணி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
அரூர் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் நடைபெற்ற இம்முகாமை அதன் தலைவர் எம்.லட்சுமி தொடங்கி வைத்தார். உடையானூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி வளாகம், கிராமத்தின் கழிவு நீர் கால்வாய்கள், சாலையோர குப்பைகள், தெருக்கள் உள்ளிட்ட பொது இடங்களை தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற்றன.
முகாமில் பேரூராட்சி துணைத் தலைவர் முல்லைரவி, செயல் அலுவலர் ஜெ.திருஞானம், துப்புரவு ஆய்வாளர் சு.ரவீந்திரன், தலைமை ஆசிரியர் ரமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி வளாகம் மற்றும் சாலையோரங்களில் 50-க்கும் அதிகமான மரக்கன்றுகள் நடப்பட்டன.