தினமணி 18.06.2010
கார்பைடு கல் மூலம் மாம்பழம் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா?
கோவில்பட்டி, ஜூன் 17: கோவில்பட்டியில் கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்று நகராட்சி ஆணையர் விஜயராகவன் தலைமையில், சுகாதார அலுவலர், ஆய்வாளர்கள் மற்றும் பணியாளர்கள் புதன்கிழமை ஆய்வில் ஈடுபட்டனர்.
கோவில்பட்டி தினசரி சந்தையிலுள்ள மாம்பழக் கடைகளில் நடைபெற்ற இந்த ஆய்வில், சுகாதார அலுவலர் ராஜசேகரன், சுகாதார ஆய்வாளர்கள் சீனிவாசன், வெங்கடேஷ், ஸ்டான்லிகுமார், தர்மராஜ், சீனிராஜ், முத்துக்குமார் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் ஈடுபட்டனர்.
அப்போது, அங்கு கார்பைடு கல் மூலம் மாம்பழங்கள் பழுக்க வைக்கவில்லை என்பது தெரியவந்தது. மேலும், கார்பைடு கல்லைப் பயன்படுத்தி மாம்பழங்களைப் பழுக்க வைத்தால், மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்படுவதுடன், கிரிமினல் வழக்கும் தொடரப்படும் என்று நகராட்சி ஆணையர் விஜயராகவன் வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்தார்.