தினமலர் 28.06.2010
குடிநீரை காய்ச்சிக்குடிக்க கலெக்டர் வேண்டுகோள்
பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் குடிநீர் விநியோகம் தொடர்பான ஆலோசனைக்கூட்டம் கலெக்டர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்றது. இந்தகூட்டத்தில் பொதுமக்கள் குடிநீரை காய்ச்சி ஆற வைத்து வடிகட்டி குடிக்க வேண்டும், மேலும் வீடுகளில் குடிநீரை சேமித்து வைத்துள்ள பாத்திரங்களை நன்றாக மூடி வைக்கவேண்டும். குளோரின் மருந்து கலக்கப்பட்ட பாதுகாப்பான குடிநீரை குடிக்க வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவறுத்தப்பட்டது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் மாதம் இரு முறை மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளை சுத்தம் செய்திடல் வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் குடிநீர் வடிகால் வாரிய அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்