தினகரன் 29.06.2010
போளூர் பகுதியில் 2 டன் கார்பைட் மாம்பழங்கள் பறிமுதல் அதிகாரிகள் அதிரடிபோளூர்
, ஜூன்29: சுகாதார அதிகாரிகள் தொடர்ந்து நடத்தி வரும் அதிரடி சோதனையில் போளூரில் கார்பைட் கல் மூலம் பழுக்க வைக்கப்பட்ட 2 டன் மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.திருவண்ணாமலை மாவட்ட சுகாதார பணிகளின் துணை இயக்குநர் என்
.சித்ரா உத்தரவின்பேரில் வட்டார மருத்துவ அலுவலர் சுரேஷ்பிரகாஷ், போளூர் பேரூராட்சி செயல் அலுவலர் எம்.வாசுதேவன் ஆகியோர் தலைமையில், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை, துப்புரவு ஆய்வாளர் வி.ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் நேற்று போளூரில் பழங்கள் விற்பனை செய்யும் 10 கடைகளிலும், குடோன்களில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.அப்போது கார்பைட் ரசாயன கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட
2 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் கடைகளில் மெழுகு தடவி ஆப்பிள்கள் விற்பனை செய்வதையும் ஈ மொய்க்கும் அழுகிய பலாப்பழத்தை விற்பனை செய்து கொண்டிருந்ததையும் அதிகாரிகள் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.