Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா? மண்டி, கடைகளில் அதிரடி சோதனை 1 டன் மாம்பழம் பறிமுதல்

Print PDF

தினகரன் 29.06.2010

கல் வைத்து பழுக்க வைக்கப்பட்டதா? மண்டி, கடைகளில் அதிரடி சோதனை 1 டன் மாம்பழம் பறிமுதல்

கிருஷ்ணகிரி, ஜூன் 29: கிருஷ்ணகிரியில் அழுகிய நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த சுமார் 1 டன் மாம்பழங்களை அதிகாரிகள் பறி முதல் செய்தனர்.

கிருஷ்ணகிரியில் கார் பைட் கல் கொண்டு பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இதன்பேரில், நகராட்சி சுகாதார அலுவலர் மோகனசுந்தரம், ஆய்வாளர் ரமேஷ், சுகாதார மேற்பார்வையாளர்கள் தனலட்சுமி, ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் உள்ள சில்லறை விற்பனை கடைகள், மொத்த விற்பனை கடைகள் மற்றும் மண்டிகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அங்கு, கார்பைட் கல் வைத்து மாம்பழங்கள் பழுக்க வைக்கப்படுகிறதா? என சோதனை செய்தனர். அப்போது, அழுகிய மாம்பழங்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாம்பழங்களை அதிகாரிகள் அகற்ற உத்தரவிட்டனர்.

இதையடுத்து, நகராட்சி ஊழியர்கள் சுமார் ஒரு டன் எடை அளவிற்கு அழுகிய மாம்பழங்களை பறிமுதல் செய்து அகற்றினர். அத்து டன் கார்பைட் கல் வைத்து பழங்களை பழுக்க வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த சோதனை மாம்பழ விற்பனையாளர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.