தினமணி 30.06.2010
கார்பைடு கல் வைக்கப்பட்ட 300 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
வேலூர், ஜூன் 29: வேலூரில் கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த 300 கிலோ மாம்பழங்களை மாநகராட்சி உணவுக்கட்டுப்பாடு அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் மாநகராட்சி உணவுக் கட்டுப்பாடு அலுவலர் கெüரிசுந்தர் தலைமையில் மாநகராட்சி ஊழியர்கள் நேதாஜி மார்க்கெட் பகுதியில் செவ்வாய்க்கிழமை பிற்பகல் சோதனை நடத்தினர்.
கார்பைடு கல் மூலம் பழுக்க வைத்த மாம்பழங்களை விற்பனை செய்த வியாபாரிகளை மாநகராட்சி அதிகாரிகள் எச்சரித்தனர். அவர்களிடம் இருந்து 300 கிலோ மாம்பழங்களை பறிமுதல் செய்தனர். கார்பைடு கற்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை உட்கொண்டால் வயிற்று வலி, வாந்தி பேதி உருவாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.