Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சுகாதாரத்துறையினர் ஆய்வு

Print PDF

தினமலர் 20.07.2010

சுகாதாரத்துறையினர் ஆய்வு

திருப்பூர்: திருப்பூர் கொங்கு மெயின் ரோட்டில் உள்ள கடைகளில் மாநகராட்சி சுகாதாரத்துறையினர் நேற்று ஆய்வு செய்தனர். மூன்று மதுக்கடை பார்கள், மூன்று பேக்கரி, இரண்டு மளிகை கடைகளில் ஆய்வு செய்யப்பட்டது.

தடை விதிக்கப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்; 200 கூல்டிரிங்ஸ் பாட்டில்கள்; சுகாதாரமற்ற தின்பண்டம்; தரமற்ற 500 குடிநீர் பாக்கெட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கடைகளுக்கு, 13 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. நகர் நல அலுவலர் ஜவகர்லால் தலைமையில், சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், தங்கவேல், வெங்கடேசன், ராமசாமி, முருகேசன், சாமிநாதன், மோகன்ராஜ் ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.