Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மாநகராட்சி கிடங்கில் பல மணி நேரம் எரிந்த குப்பைகள்

Print PDF

தினமலர் 28.07.2010

மாநகராட்சி கிடங்கில் பல மணி நேரம் எரிந்த குப்பைகள்

திருநெல்வேலி: நெல்லை மாநகராட்சி குப்பை கிடங்கில் பற்றிக்கொண்ட தீ பலமணி நேரம் எரிந்தது. திருநெல்வேலி மாநகராட்சி பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகள் நெல்லை-சங்கரன்கோவில் ரோட்டில் உள்ள ராமையன்பட்டி அருகே குப்பை கிடங்கில் சேகரிக்கப்படுகிறது. நேற்று மாலை 5 மணியளவில் குப்பை கிடங்கில் திடீரென தீ பற்றிக்கொண்டது. குப்பைகள் அதிகஅளவில் கிடப்பதால் ஒரு பனைமர உயத்திற்கு தீ ஜூவாலையுடன் எரிந்தது. பாளையங்கோட்டை, பேட்டை ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வண்டிகள் சென்று போராடி தீயை அணைத்தனர். ஆடிக்காற்று பலமாக வீசுவதால் ஒரு இடத்தில் தீயை அணைத்தாலும் அடுத்த இடத்தில் பற்றிக்கொண்டு மளமளவென எரிந்தது. நான்கைந்து கிலோமீட்டர் சுற்றளவிற்கு குப்பை கிடங்கு உள்ளதால் தீயை அணைக்க மாவட்டத்தின் பிற பகுதிகளில் இருந்தும் தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. இரவில் ஏற்பட்ட தீயினால் அந்த பகுதி முழுவதும் புகைமண்டலமாக காணப்பட்டது. இரவு முழுவதும் தீயணைப்பு பணியில் படையினர் ஈடுபட்டனர்.