Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

உணவு பொருள் விற்பனை அனுமதி பெற 10 நாட்கள் அவகாசம்:

Print PDF

தினமலர் 03.08.2010

உணவு பொருள் விற்பனை அனுமதி பெற 10 நாட்கள் அவகாசம்:

செஞ்சி:செஞ்சியில் உரிய அனுமதி இல்லாமல் உணவு பொருள் விற்பனை செய்பவர்கள் 10 நாட்களுக்குள் அனுமதியை பெற வேண் டும் என சுகாதாரத்துறை உதவி இயக்குனர் கிருஷ் ணராஜ் தெரிவித்துள்ளார்.செஞ்சியில் குளிர்பான கடை மற்றும் உணவு பொருள் விற்பனை செய் யும் கடைகளில் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் தலைமையில் நேற்று அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத் தினர். டாக்டர் மலர்விழி, உணவு ஆய்வாளர் நல்லதம்பி, செஞ்சி பேரூராட்சி செயல் அலுவலர் தமிழ்ச் செல்வன், சுகாதார ஆய்வா ளர் ஏழுமலை ஆகியோர் அடங்கிய குழுவினர் கடைகளில் இருந்து உணவு பொருட்களின் மாதிரியை சீல் வைத்து எடுத்து சென்றனர்.ஆய்விற்கு பின்னர் சுகாதாரத்துறை உதவி இயக்குனர் டாக்டர் கிருஷ்ணராஜ் நிருபர்களிடம் கூறியதாவது.உணவு பொருள் விற் பனை செய்யும் கடைகள், உற்பத்தி செய்யும் தொழிற் சாலைகள் அனைத்தும் கட்டாயம் சுகாதாரத்துறையிடமும், உள்ளூர் நிர்வாகத்திடமும் அனுமதி பெற்றிருக்க வேண்டும்.வீடுகளில் இது போன்று கடை நடத்துபவர்கள் புளு பிரிண்ட் கொடுத்து உரிய அனுமதி வாங்க வேண் டும். செஞ்சியில் ஓட்டல், உணவு பொருள் விற்பனை செய்பவர்களும் அதிகளவில் இதற்கான உரிமம் இல்லாமல் கடை நடத்துகின்றனர். இவர்கள் 10 நாட் களுக்குள் உணவு ஆய்வா ளர் மற்றும் பேரூராட்சி செயல்அலுவலர் மூலம் உரிமம் வாங்க வேண்டும். தவறினால் அதிகாரிகள் சோதனையின் போது தக்க நடவடிக்கை எடுக்கப்படும். இதில் கடைகளுக்கு சீல் வைப்பது, உரிமையா ளர் கைது, வழக்கு பதிவு என எந்தவகையான நடவடிக்கையும் இருக்கலாம்.பால் பொருட்கள் விற் பனை செய்பவர்கள் அதில் தண்ணீர் கலந்து விற்பனை செய்யக்கூடாது. மழைக்காலத்தில் ஓட்டல்களில் சுடுதண்ணீர் வழங்க வேண் டும். சுகாதாரமில்லாமல் தயாரிக்கப்படும் உள்ளூர் குளிர்பானங்களை பொது மக்கள் சாப்பிடக்கூடாது. இவ்வாறு கிருஷ்ணராஜ் தெரிவித்தார்.