Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

திருத்தணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு

Print PDF

தினமணி 10.08.2009

திருத்தணியில் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு

திருத்தணி, ஆக. 8: திருத்தணியில் பல இடங்களில் டீக் கடைகள், குளிர்பானக் கடைகள் ஆகியவற்றில் சுகாதார ஆய்வாளர்கள் திடீர் சோதனை நடத்தினர்.

திருத்தணியில் உள்ள பஸ் நிலையம், அரக்கோணம் சாலை, .பொ.சி. சாலை, திருக்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள டீக்கடைகள், குளிர்பானக் கடைகள், மளிகைக் கடைகளில் சுகாதார ஆய்வாளர்கள் சோதனை நடத்தினர்.

அப்போது, திருக்குளம் பகுதியில் உள்ள கடைகளில் பாதுகாப்பு இல்லாமல் தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம், தரமற்ற குடிநீர்பாக்கெட்டுகள், டீக்கடைகளில் தரமற்ற டீத்தூள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் திருத்தணி நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் கருப்பையா, வாசு, தேவராஜ், வெங்கடேசன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர்.