Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடைகள் தோறும் சிமென்ட் குப்பை தொட்டி பொதுமக்கள் வலியுறுத்தல்

Print PDF

தினகரன் 09.08.2010

கடைகள் தோறும் சிமென்ட் குப்பை தொட்டி பொதுமக்கள் வலியுறுத்தல்

புதுக்கோட்டை, ஆக. 9: புதுக்கோட்டை மத்திய பஸ் நிலையத்தில் 50 முதல் 100 கடை வரை உள்ளன. கடைகள் அனைத்தும் நகராட்சி மூலம் டெண்டர் விடப்பட்டு மாதந்தோறும் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. கடைகளுக்கு முன்பு குப்பை, கூளங்கள் அதிகமாக சோந்து துர்நாற்றம் வீசும் அளவிற்கு குப்பைகள் சேருகின்றன. இதை போக்க அந்தந்த கடைகளுக்கு முன் சிமெண்ட் குப்பை தொட்டிகள் அமைக்கவேண்டும்.

தமிழ்நாட்டில் பல்வேறு நகராட்சி பஸ் நிலையங்களில் குப்பை சேராமல் சுகாதாரமாக வைக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுக்கோட்டை நகராட்சிக்குட்பட்ட மத்திய பஸ் நிலையத்தில் அனைத்து கடைகள், நகராட்சி அமைக்கப்படும் குப்பை தொட்டிகளில் குப்பைகளை போட்டால் சுத்தமாக, சுகாதாரமாக இருக்கும் என்று கருத்து தெரிவித்தனர்.