தினமணி 10.08.2010
|ரூ. 3.85 கோடியில் நவீன வதைக்கூடம்
மதுரை, ஆக 9: மதுரை மாநகராட்சி சார்பில் அனுப்பானடியில் ரூ|. 3.85 கோடியில் நவீன ஆடு வதைக் கூடம் திங்கள்கிழமை திறக்கப்பட்டது.
மேயர் தேன்மொழி இதனை தொடக்கிவைத்துப் பேசுகையில், நெல்பேட்டை மற்றும் செல்லூர் பகுதியில் ஆடுகள் வதை செய்யப்படுகையில், கழிவுகளை சுகாதாரமற்ற முறையில் கொட்டி வருவதால், அப்புறப்படுத்தப்பட முடியாத நிலை இருக்கிறது.
இதனைக் கருத்தில்கொண்டுதான் இந்த வதைக் கூடம் கட்டப்பட்டது. ஜப்பானியத் தொழில்நுட்பத்துடன் நவீன முறையில் இது அமைக்கப்பட்டிருக்கிறது.
இங்கு ஒரு நாளைக்கு 1,200 ஆடுகள் வரை வதை செய்ய இயலும். சுகாதாரக்கேடு ஏற்படாதவாறு கழிவுகளை சுத்திகரிக்கவும் முடியும் என்றார்.
நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையாளர் எஸ். செபாஸ்டின், தலைமைப் பொறியாளர் சக்திவேல், நகர அமைப்புச் செயலாளர் முருகேசன், உதவி ஆணையர்கள் அங்கயற்கண்ணி, தேவதாஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.