Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

14,593 வகையான நோய்கள் தாக்கியது குர்லா மிகவும் சுகாதாரமற்ற பகுதி

Print PDF

தினகரன் 12.08.2010

14,593 வகையான நோய்கள் தாக்கியது குர்லா மிகவும் சுகாதாரமற்ற பகுதி

குர்லா,ஆக.12: மும்பையில் மிகவும் சுகாதாரமற்ற பகுதி யாக குர்லா கண்டறியப் பட்டுள்ளது. மும்பையில் சுகாதார மான பகுதி மற்றும் சுகாதார மற்ற பகுதி எவை என்பது குறித்து தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று மாநக ராட்சியின் சுகாதாரத் துறையிடம் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் கடந்த இரண்டு ஆண்டில் மும் பையை தாக்கிய நோய்கள் பற்றிய விவரத்தை பெற்று, வெள்ளை அறிக்கை வெளி யிட்டுள்ளது.

இதன் படி கடந்த ஒரு ஆண்டில் குர்லா பகுதியை உள்ளடங் கிய வார்டில் 14,593 வகை யான நோய்கள் தாக்கி பொதுமக்கள் தனியார் மற்றும் அரசு மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுள்ளனர். குறிப்பாக இப்பகுதியில் வயிற்றுபோக்கு, மலேரியா, டி.பி., நீரிழிவு நோய்கள்தான் அதிக அளவில் தாக்கி இருக் கிறது. வயிற்று போக் கால் கடந்த ஆண்டு மட்டும் ஒரு லட்சம் பேர் பாதிக்கப் பட்டனர்.

இரண்டாவது இடத்தில் மலேரியா காய்ச்சல் இருக் கிறது. இரண்டாவது சுகாதாரமற்ற வார்டு என்ற பெயர் பரேல் பகுதிக்கும் அதனை தொடர்ந்து பிரபா தேவி, ஒர்லி மற்றும் அந்தேரி, கல்பாதேவி& பைகுலா வார்டுகள் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக மாநக ராட்சி தெரிவித்துள்ளது. இந்த 5 வார்டுகளிலும் கடந்த இரண்டு ஆண்டில் மேற்கண்ட நோய்கள் அதிக அளவில் தாக்கி இருக் கிறது. பரேல்(‘எப்தெற்கு), பிரபாதேவி(‘ஜிதெற்கு), குர்லா(‘எல்’) வார்டுகளில் மலேரியா தாக்கம் 33 சதவீதம் இருந்தது. மற்ற இருவார்டுகளில் 25 சதவீதம் அளவுக்கு இருந்தது. மாநக ராட்சி வார்டுகளில் அமைக்கப்பட்டுள்ள சுகா தாரக்கமிட்டியின் கூட்டம் கடந்த இரண்டு ஆண்டுகளில் 28 முறை நடந்துள்ளது. ஆனால் ஒரு கூட்டத்தில் கூட சுகாதாரத்தை மேம் படுத்துவது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.