Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கடல் பகுதியில் எண்ணெய் படலம் கடல் உணவு வகைகள் பரிசோதனை மாநகராட்சி நடவடிக்கை

Print PDF

தினகரன் 12.08.2010

கடல் பகுதியில் எண்ணெய் படலம் கடல் உணவு வகைகள் பரிசோதனை மாநகராட்சி நடவடிக்கை

மும்பை, ஆக. 12: மும்பை கடல்பகுதியை, எண்ணெய் மாசுபடுத்தியுள்ளதை அடுத்து கடல் உணவு வகை களின் சுகாதாரத்தை மாநக ராட்சி நிர்வாகம் பரி சோதனை செய்து வரு கிறது.

மும்பை கடற்பகுதியில் இரண்டு கப்பல் மோதி விபத்துக்குள்ளானது. கப் பல்கள் மோதியதில் அவற் றில் இருந்த எண்ணெய் கடலில் கசிந்தது. லட்சக்க ணக்கான லிட்டர் எண் ணெய் கடலில் சிந்தியதால் அது கடல் நீரில் பரவி யது. இதையடுத்து கடல் பகுதி எண்ணெய் மாசடைந்தது.

மாசடைந்துள்ள கடல் பகுதியில் கிடைக்கும் கடல் உணவு வகைகள் சுகாதா ரமாக இருக்கிறதா? அல்லது மாசடைந்துள்ளதா? என் பதை மும்பை மாநகராட்சி அதிகாரிகள் பரிசோதித்து வருகின்றனர். மாநகராட்சி சந்தைகளில் இந்த பரி சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இது குறித்து மாநகராட்சி துணை கமிஷனர் (சந் தைகள்) தீபக் காமத் கூறு கையில், "கடலில் கசிந்த எண்ணெய் மும்பை கடற் பகுதியில் வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக கடல் உணவு வகைகள் மாசடைந்திருக்க கூடும். மாநகராட்சி சந்தைகளில் விற்கப்படும் மீன்கள் மற் றும் இறால் போன்றவற்றின் மாதிரிகள் ஆய்வுக்கூட பரிசோதனைக்காக அனுப் பப்பட்டுள்ளன.

பரிசோதனையில் இவை சுகாதாரமானவையா? இல்லையா? என்பது தெரிய வரும். மீனவர்களுக்கு மீன்பிடிதான் ஒரே வருமா னம் என்பதால் அவர்கள் கடலில் மீன் பிடி தொழிலை தொடங்கியிருப்பார்கள் என்ற அச்சம் நிலவுகிறது. இந்த மீனவர்கள் விற்பனை செய்யும் கடல் உணவு வகைகளால் சுகாதார கேடு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக பரிசோதனை செய்து வருகிறோம்.

எண்ணெய் பரவல் அதிகமாக காணப்படும் கொலாபா, போர்ட், நரிமன்பாயின்ட் ஆகிய பகுதிகளில்தான் கடல் உணவு வகைகள் அதி கம் கிடைக்கிறது. எனவே இந்த பகுதிகளில் உள்ள சந் தைகளில் பரிசோதனை தீவிரப்படுத் தப்பட்டுள்ளது. இது அடுத்த சில நாட்களு க்கு தொடரும்" என்றார்.

மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் 92 மாநகராட்சி சந்தைகள் உள்ளன. இவற் றில் 53 சந்தைகளில் கடல் உணவு வகைகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மும்பையில் உள்ள 29 சந் தைகளில் 24 சந்தைகளில் கடல் உணவு வகைகள் விற்பனை செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக் கது.

கடல் உணவு வகைகளை வாங்கும் மக்கள் முன்னெச் சரிக்கையாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தி யுள்ள மாநகராட்சி, மாச டைந்த கடற்பகுதிகளில் மீனவர்கள் மீன் பிடிக்க வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.