Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பூங்காவைச் சுத்தப்படுத்திய காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள்

Print PDF
தினமணி 11.08.2009
பூங்காவைச் சுத்தப்படுத்திய காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள்

நாகர்கோவில், ஆக. 10: நாகர்கோவில் நகராட்சி சி.பி.ஆர். பூங்காவை காதுகேளாதோர் பள்ளி மாணவர்கள் சுத்தப்படுத்தினர்.

இப் பள்ளியில் 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். அவர்களிடையே சமூக தொண்டின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இப் பணி மேற்கொள்ளப்பட்டது.

இப் பள்ளியின் 40 மாணவர்கள் நகராட்சிப் பூங்காவைச் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். இம் முயற்சி நாகர்கோவிலில் சுற்றுச்சூழலை மேம்படுத்தவும், பூங்காக்களை நல்ல முறையில் பராமரிக்கவும், பொது இடங்களை பொதுமக்கள் தாங்களே முன்வந்து சீரமைக்க வேண்டும் என்பதையும் வெளிப்படுத்துவதாக பள்ளி இயக்குநர் டாக்டர் பி.ஜே. கிறிஸ்டோபர், இயற்கைப் பாதுகாப்பு அறக்கட்டளைத் தலைவர் டாக்டர் ஆர்.எஸ். லால்மோகன் ஆகியோர் தெரிவித்தனர்.

பள்ளி ஆசிரியைகள் எஸ். லதிகா, ஆர். சீதாமணி, சாந்தினி, மனோஜ் ஆகியோர் சுத்தப்படுத்தும் பணியில் மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

Last Updated on Tuesday, 11 August 2009 07:08