Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

மலேரியா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் 33 கட்டுமான இடங்களில் வேலையை நிறுத்த மாநகராட்சி உத்தரவு

Print PDF

தினகரன் 13.08.2010

மலேரியா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாததால் 33 கட்டுமான இடங்களில் வேலையை நிறுத்த மாநகராட்சி உத்தரவு

மும்பை, ஆக.13: மும்பை யில் மலேரியாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையொட்டி, மலேரியா கட்டுப்பாடு விதி முறைகளை பின்பற்றத் தவ றியதற்காக 33 இடங்களில் கட்டுமான பணிகளை நிறுத்தும்படி மாநகராட்சி உத்தரவிட்டு இருக்கிறது.

கட்டுமான பணிகள் நடைபெறும் இடங்களில் தேங்கிக் கிடக்கும் தண்ணீர் மூலமாக கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாகின் றன. எனவே இதுபோன்று தண்ணீர் தேங்கிக் கிடப்பதை தவிர்க்க வேண்டும், கட்டு மான தொழிலாளர்க ளுக்கு மலேரியா சோதனை நடத்த வேண்டும், கொசு மருந்து அடிக்க வேண்டும் என்பது போன்ற பல்வேறு விதிமுறை களை பின்பற்றும் படி பில் டர்களுக்கு மாநக ராட்சி உத்தரவிட்டு இருந் தது.

ஆனால் இவற்றை பின்பற்ற பல பில்டர்கள் தவறி விட்டனர். இதற்காக 33 இடங்களில் கட்டுமான வேலைகளை நிறுத்தி வைத்து மாநகராட்சி உத்தர விட்டு இருக்கிறது. இவற்றில் 20 இடங்கள் கிழக்கு புறநகர் பகுதிகளிலும் 13 இடங்கள் மேற்கு புறநகர் பகுதிகளிலும் உள்ளன.

தென் மும்பை, கிழக்கு புறநகர் மற்றும் மேற்கு புற நகர் பகுதிகளில் கட்டுமான வேலைகள் நடைபெறும் இடங்களை பார்வையிடுவ தற்காக மாநகராட்சியால் நியமிக்கப்பட்டு இருந்த மூன்று சிறப்பு குழுக்கள் இந்த இடங்களை பார்வை யிட்டதை அடுத்து பில்டர் களுக்கு இந்த வேலை நிறுத்த நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டன.

இந்த சிறப்பு குழுக்களில் சுகாதாரத்துறை, மற்றும் கட்டுமான திட்ட இலா காவை சேர்ந்த அதிகாரி களும் மற்றும் வார்டு அதி காரிகளும் இடம் பெற்றுள் ளனர். கடந்த சில நாட்களில் இந்த குழுவினர் கட்டுமான வேலைகள் நடைபெற்று வரும் 939 இடங்களை பார்வையிட்டனர்.

வேலை நிறுத்த நோட் டீஸ் தவிர, நகரம் முழுவதும் மலேரியா தடுப்பு விதிமு றைகளை பின்பற்றாத மேலும் 635 கட்டுமான இடங்களுக்கு எச்சரிக்கை நோட்டீசும் அனுப்பப்பட்டி ருக்கிறது. இவற்றில் 296 இடங்கள் மேற்கு புறநகர் பகுதியில் உள்ளன. 252 இடங்கள் தென் மும்பையிலும் 87 இடங்கள் கிழக்கு புறநகர் பகுதியிலும் உள்ளன.

மலேரியாவை கட்டுப் படுத்த மாநகராட்சியும் மாநில அரசும் கடுமையாக போராடி வருகின்றன. மாநகராட்சி புள்ளி விவரங் களின்படி கடந்த ஆண்டு டன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் ஜூன் மாதங்களுக்கு இடையே மலேரியா நோய் பாதித்தவர்களின் எண் ணிக்கை 55 சதவீதம் அதிகரித்து இருக்கிறது.