Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

பெரம்பூரில் பதுக்கல் 500 கிலோ டீத்தூள் சிக்கியது கலப்படம் செய்ததா? என ஆய்வு செய்ய உத்தரவு

Print PDF

மாலை மலர் 13.08.2010

பெரம்பூரில் பதுக்கல் 500 கிலோ டீத்தூள் சிக்கியது கலப்படம் செய்ததா? என ஆய்வு செய்ய உத்தரவு

பெரம்பூரில் பதுக்கல்
 
 500 கிலோ டீத்தூள் சிக்கியது
 
 கலப்படம் செய்ததா? என ஆய்வு செய்ய உத்தரவு

பெரம்பூர், ஆக. 13- பெரம்பூர் பகுதியில் உள்ள டீக்கடைகளில் போலி டீத்தூள் சப்ளை செய்யப்படுவதாக பொதுமக்களிடம் இருந்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

இதைத்தொடர்ந்து மாநகராட்சி ஆய்வாளர் பால்பாண்டியன் டீக்கடைகளில் ஆய்வு நடத்தினார். அங்கிருந்த டீத்தூள்களை கைப்பற்றி இதை சப்ளை செய்வது யார்? என்று கேட்டு விசாரணை நடத்தினார்.

அப்போது பெரம்பூர் கண்ணன் தெருவைச் சேர்ந்த பாபு என்பவர் டீத்தூள் சப்ளை செய்தது தெரிய வந்தது. அவரது வீட்டை சோதனையிட்டபோது 500 கிலோ டீத்தூள் சிக்கியது.

இவை நல்ல தேயிலையா? அல்லது கலப்படம் செய்யப்பட்டதா? என்பதை அறிய டீத்தூளின் மாதிரி ஆய்வுக்கு அனுப்பப்பட்டது. ஆய்வின் முடிவில் உண்மை நிலை தெரிய வரும்.