தினமணி 18.08.2010
குளத்தை தூய்மைப்படுத்த கோரிக்கை
திண்டுக்கல், ஆக. 17: திண்டுக்கல் சிலுவத்தூர் சாலையில் குமரன் திருநகரில் உள்ள குளத்தை தூய்மைப்படுத்தி நீராதாரத்திற்கு தேவையானதாக உருவாக்க மாவட்ட நிர்வாகம், திண்டுக்கல் நகராட்சி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என ரவுண்டு ரோடு ராம்நகர் குடியிருப்போர் நலச் சங்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
சங்க பொது மகாசபைக் கூட்டத்திற்கு, சங்கத் தலைவர் மருத்துவர் ஆர்.சண்முகராஜ் தலைமை வகித்தார். செயலாளர் கே.பார்த்தசாரதி வரவேற்றார். தொழிலதிபர் வெங்கடாஜலம், விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கினார். துணைச் செயலாளர் பி.பசுபதி நன்றி கூறினார்.
ராம்நகர் பகுதியில் உள்ள கழிவுநீர் ஓடையை சீரமைக்க வேணடும், நகராட்சி சித்த மருத்துவமனைக்கு புதிய கட்டடப் பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும், பாதாள சாக்கடைத் திட்டப் பணிகளை விரைவில் சீரமைத்து தார்ச்சாலைகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.