தினமலர் 24.08.2010
கள்ளக்குறிச்சி கடைகளில் ரெய்டு காலாவதி பொருட்கள் பறிமுதல்
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் உள்ள கடைகளில் சுகாதார துறை மற்றும் நகராட்சி அலுவலர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியில் சில கடைகளில் சுகாதாரமற்ற பொருட்கள் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக சுகாதார துறையினருக்கு புகார் கிடைத்தது. இதையடுத்து கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொள்ளுமாறு கள்ளக்குறிச்சி சுகாதார மாவட்ட துணை இயக்குனர் கீதா உத்தரவிட்டார்.
மேலூர் வட்டார மருத்துவ அலுவலர் பாக்கியராஜ் மேற்பார்வையில், சுகாதார மேற்பார்வையாளர் தாமரைச்செல்வன் உள்ளிட்ட குழுவினர் கச்சிராயபாளையம் சாலையிலுள்ள கடைகளில் திடீர் சோதனை நடத்தினர். அப்போது காலாவதியான குளிர்பானங்கள், பிஸ்கட் உள் ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
ஆய்வின்போது நகராட்சி துப்புரவு ஆய்வாளர் செல்வம், மேற்பார்வையாளர் சேகர், சுகாதார ஆய்வாளர்கள் மகாலிங்கம், வைத்தியநாதன், ரவிக்குமார், கணேசன் ஆகியோர் உடனிருந்தனர்.