Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான 30 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

Print PDF

தினமணி 28.04.2010

காலாவதியான 30 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு

ஆரணி, ஆக.24: சேத்துப்பட்டு கடைகளில் இருந்த காலாவதியான 30 மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதாரத் துறையினர் பறிமுதல் செய்து அழித்தனர்.

சேத்துப்பட்டு பஜாரில் உள்ள குளிர்பானக் கடைகளில், செய்யாறு சுகாதாரத்துறை துணை இயக்குநர் தேவபார்த்தசாரதியின் உத்தரவின்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு செய்தனர். அப்போது காலாவதியான 30 மூட்டை தண்ணீர் பாக்கெட் மூட்டைகளை பறிமுதல் செய்து அழித்தனர். மீண்டும் இவ்வாறு விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடைகாரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.