தினகரன் 26.08.2010
நாகர்கோவிலில் காலாவதி தண்ணீர் பாக்கெட்டுகள் அழிப்பு
நாகர்கோவில், ஆக.26: நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் நகராட்சி பகுதிகளில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதாரத்துறையினர் அழித்தனர்.
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம் மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில், விற்கப்படும் தண்ணீர் பாட்டில்கள், குளிர் பானங்கள் மற்றும் தண்ணீர் பாக்கெட்டுகளின் தரம் குறித்து நகர் நல அலுவலர் டாக்டர் போஸ்கோ ராஜா தலைமையில் சோதனை நடைபெற்றது. சுகாதார ஆய்வாளர்கள் சிதம்பர ராமலிங்கம், பகவதி பெருமாள், மணிகண்டன், மாதவன்பிள்ளை, கண்ணன் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். 30க்கும் மேற்பட்ட கடை களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் 3 கடைகளிலிருந்து உற்பத்தி தேதி குறிப்பிடாத, ஐ.எஸ்.ஐ முத்திரை இல்லாத மற்றும் காலாவதியான மொத்தம் 32 மூடை தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவை கடைகள் முன்பே கொட்டி அழிக்கப்பட் டன.நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையத்தில் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை அதிகாரிகள் கைப்பற்றி அழித்தனர்.