Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினகரன் 26.08.2010

காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

தென்காசி, ஆக. 26: தென்காசியில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய அதிரடி சோத னை யில் ரூபாய் 30 ஆயிரம் மதிப்புடைய காலாவதியான தண் ணீர் பாக்கெட்டுகள் கண்டுபிடித்து அழிக்கப்பட்டது.

தென்காசி நகராட்சி ஆணையாளர் செழியன், உணவு பொருள் ஆய்வாளர் ஹக்கீம், துப்புரவு அதிகாரி டெல்விஸ்ராய், பயிற்சி உணவு ஆய்வாளர்கள் மகாராஜன், முகமது இஸ்மா யில் காசிம், சுகாதார மேற்பார்வையாளர்கள் முகமது காசிம், தங்கவேலு ஆகியோர் டாஸ்மாக் பார் உள்பட நகர் முழுவதும் உள்ள கடைகளில் அதிரடி சோதனை நடத்தி னர். இதில் ரூபாய் 30 ஆயி ரம் மதிப்புடைய தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டது.

களக்காடு:

திருக்குறுங்குடி அரசு சுகாதார நிலைய வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சாகுல்ஹமீது தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் களக்காடு, ஏர்வாடி பகுதிகளில் உள்ள கடைகளில் சோதனை நடத்தினர். இதில் காலாவதியான 1,750 தண்ணீர் பாக்கெட்டுகள், ஒரு லிட்டர் கேன்கள் 10 ஆகியவற்றையும் பறிமுதல் செய்து அழித்தனர்.