Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

குடிநீர் கிணறுகளில் தூர் வாரும் பணி: அதிகாரி ஆய்வு

Print PDF

தினமணி 14.08.2009

குடிநீர் கிணறுகளில் தூர் வாரும் பணி: அதிகாரி ஆய்வு

ஆம்பூர், ஆக.12: நகராட்சிகளின் நிர்வாக மண்டல இயக்குநர் பாலசுப்பிரமணி ஆம்பூரில் செவ்வாய்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.

ஆம்பூர் நகருக்கு குடிநீர் வழங்கும் ஆதார இடங்களையும், அங்கு குடிநீர் கிணறுகளில் தூர்வாரும் பணி நடைபெறுவதையும் அவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

குடிநீர் ஆதாரங்களைப் பெருக்குவது குறித்தும், குடிநீர் பற்றாக்குறையை களைவது குறித்தும் ஆம்பூர் நகர்மன்றத் தலைவர் வாவூர் நஜீர் அஹமத், நகராட்சி ஆணையர் உதயராணி, நகராட்சிப் பொறியாளர் இளங்குமரன் ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினார்.