Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

ஆரணியில் சுகாதாரத் துறை திடீர் ஆய்வு: காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 26.08.2010

ஆரணியில் சுகாதாரத் துறை திடீர் ஆய்வு: காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

ஆரணி, ஆக.25: ஆரணி நகரக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை சுகாதாரத் துறையினர் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.சுகாதாரத்துறை சார்பில் டாக்டர்கள் செந்தில்குமார், ஐங்கரன் உள்ளிட்டோர் கொண்ட குழுவினர் ஆரணி பகுதியில் உள்ள குளிர்பானக்கடைகள், டாஸ்மாக் பார்கள் ஆகிய இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இதில் காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் மற்றும் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.