Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

துர்நாற்றம் வீசிய குடிநீர் தேக்க தொட்டி சுத்தமானது

Print PDF

தினகரன் 27.08.2010

துர்நாற்றம் வீசிய குடிநீர் தேக்க தொட்டி சுத்தமானது

குன்னூர், ஆக.27: குன்னூர் அருகேயுள்ள உலிக்கல் கிராமத்தில் நூற்றுக் கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. பேரூராட்சி சார்பில் குடிநீர் தேக்க தொ ட்டி கட்டப்பட்டு அதன் மூலம் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாகவே குடிநீரில் அதிக துர்நாற்றம் வீசியதால் பொது மக்கள் பெரிதும் அவதியுற்று வந்த னர்.

துர்நாற்றம் வீசிய குடிநீரை பயன்படுத்திய 15க்கும் மேற்பட்டோருக்கு கடந்த இரு தினங்களாகவே வாந்தி, பேதி ஏற்பட்டது.

இதனால் சந்தேகம் அடைந்த மக்கள், நேற்று காலை குடி நீர் தொட்டி யை பார்வையிட்டனர். அதில் உருவம் தெரியாத நிலையில் அழுகிய நிலையில் உருவம் காணப்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியுற்றனர்.

இதுகுறித்து உலிக்கல் பேரூராட்சி தலைவருக்கு தகவல் கொடுக்கப்பட் டது. பேரூராட்சி தலைவர் சுரேஷ், செயல் அலுவலர் ஆல்துரை ஆகியோர் சம்பவ பகுதிக்கு விரைந்து சென்று குடிநீர் தேக்க தொட்டியை பார்வையிட்டனர். பின்னர் குடிநீர் தேக்க தொட்டியை சுத்தம் செய்யும் பணியை மேற்கொள்ள துப்புரவு தொழிலாளர்களுக்கு உத்தரவிட்டனர். வரும் காலங்களில் இதுபோன்ற நிலை ஏற்படாமல் இருக்க தொட்டி மீது மேல் மூடி போடப்படும் என்று அதிகாரிகள் உறுதியளித்தனர்.

இந்த தொட்டியில் உள்ள குடிநீரை பொதுமக்கள் பயன்படுத்த வேண்டாம். முழுமையாக சுத்தம் செய்த பின் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கேட்டு கொள்ளப்பட்டனர்.