தினமலர் 27.08.2010
கொசு ஒழிப்பில் மாநகராட்சி தீவிரம்
சென்னை: கூவம் ஆற்றின் நடுவே வேலி அமைத்து கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் ஆகாயத் தாமரைகளை அகற்றும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சென்னை, அண்ணா நகரில் எம்.ஜி.ஆர்., காலனி மற்றும் நடுவங்கரை அருகே கூவம் ஆற்றில் உள்ள நடைபாலத்தில் வேலி வலை போட்டு நீரில் அடித்து வரும் ஆகாயத் தாமரைகள் மற்றும் கொசுப் புழுக்களை அகற்றி கொசு ஒழிப்பு மருந்து தெளிக்கும் பணியை சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. சென்னை முழுக்க கொசுப் புழு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்கு 350 கைத்தெளிப்பான்கள், 75 இயந்திர தெளிப்பான்கள், 20 கால் அழுத்த தெளிப்பான்கள், 236 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு, கொசு ஒழிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது.