Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கூவத்தில் கொசு உற்பத்தியாகும் ஆகாய தாமரைகள் அகற்றம்

Print PDF

தினமணி 27.08.2010

கூவத்தில் கொசு உற்பத்தியாகும் ஆகாய தாமரைகள் அகற்றம்

சென்னை அண்ணா நகரில் எம்.ஜி.ஆர். காலனி மற்றும் நடுவங்கரை நடைபாலம் அமைந்துள்ள கூவம் ஆற்றின் நடுவே வேலி அமைத்து கொசு உற்பத்தியாகும் ஆகாயத் தாமரைகளை அகற்றம்

சென்னை, ஆக.26: சென்னையில் கூவம் ஆற்றில் கொசு உற்பத்தியாகும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்பட்டு வருகின்றன. கூவத்தின் நடுவே தடுப்பு வேலி அமைத்து இப்பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சென்னை மாநகராட்சி வியாழக்கிழமை வெளியிட்ட செய்தி:

சென்னை அண்ணா நகரில் உள்ள எம்.ஜி.ஆர். காலனி மற்றும் நடுவங்கரை நடைபாலம் கூவம் ஆற்றின் நடுவே வேலி அமைத்து, நீரில் வரும் ஆகாயத் தாமரைகள் மற்றும் கொசுப்புழு தடுப்பு மருந்து தெளிக்கப்பட்டு வருகிறது.

இதனால் புறநகர் பகுதி மற்றும் 100 அடி சாலை, அரும்பாக்கம், நியூ காலனி போன்ற பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் ஆகாயத் தாமரைகள் அகற்றப்படுவதுடன், உற்பத்தியாகும் கொசுப் புழுக்கள் அழிக்கும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் கொசுப்புழு மற்றும் கொசு ஒழிப்பு பணிகளுக்காக 350 கைத்தெளிப்பான்கள், 75 இயந்திர தெளிப்பான்கள், 20 கால் அழுத்த தெளிப்பான்கள், 236 சிறிய புகை பரப்பும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டு கொசு ஒழிக்கும் பணி மாநகராட்சி துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சுகாதார அலுவலர் பெ.குகானந்தம் மேற்பார்வையில், சுகாதார அலுவலர் பிரபாவதி உள்ளிட்ட பூச்சியியல் வல்லுநர்கள், துப்புரவு அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர்கள் ஆகியோர் கொசு ஒழிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்