Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தஞ்சை அருகே காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

Print PDF

தினமணி 30.08.2010

தஞ்சை அருகே காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகள் பறிமுதல்

தஞ்சாவூர், ஆக 29: தஞ்சாவூர் அருகே கடைகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி காலாவதியான தண்ணீர் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்து சனிக்கிழமை அழித்தனர்.

தஞ்சாவூர் அடுத்த அம்மாபேட்டை வட்டாரப் பகுதிகளில் கடைகளில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கே.எஸ். அசோக்குமார் தலைமையில் சுகாதார ஆய்வாளர்கள் பாண்டியன், அருள்பிரகாசம், கவுதமன் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். அப்போது தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, .எஸ்.. முத்திரை இல்லாத குடிநீர் பாக்கெட்டுகளை கைப்பற்றி கடைக்காரர்கள் முன்னிலையிலேயே அழித்தனர்.

இந்தச் சோதனை சுகாதார பணிகள் துணை இயக்குநர் கே. மதிவாணன் உத்தரவின்பேரில், வட்டார மருத்துவ அதிகாரி சித்ராதேவி அறிவுரையின் பேரில் மேற்கொள்ளப்பட்டது.