Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுவால் பரவும் மலேரியாவை தடுக்க மாத்திரை

Print PDF

தினகரன் 02.09.2010

கொசுவால் பரவும் மலேரியாவை தடுக்க மாத்திரை

பெர்லின், செப்.2: உள்ளங்கையில் பிடித்துவிட்டால் இடிபாடுகளில்சிக்கி மூச்சு திணறி செத்துவிடக்கூடிய தம்மாத்தூண்டு பூச்சி கொசு. என்னமாய் படுத்தி எடுக்கிறது. மாலை 5 மணிக்கே வாசல் கதவு முதற்கொண்டு ஜன்னல்கள், இண்டு, இடுக்கு விடாமல் வீட்டின் அத்தனை துவாரங்களையும் அடைத்து.. வலை கட்டி, வீடு முழுக்க ஸ்பிரேஅடித்து, கொசுவர்த்தி கொளுத்தி, மேட் புகையவிட்டு என்று எவ்வளவு தடுப்பு வூயகம் அமைத்தாலும், அத்தனை வியூகத்தையும் தகர்த்துக் கொண்டு நைசாக வீட்டுக்குள் ஊடுருவில், நம்மை கடித்து விட்டு தப்பிககிறது கொசுக்கள். டெங்கு, சிக்கன்குனியா, மலேரியா என பல நோய்களை பரப்பி நம்மை படாதபாடு படுத்திவிடுகிறது. இந்த இரண்டரை மில்லிகிராம் பூச்சியால் பரவும் . மலேரியா காய்ச்சலால் ஆண்டுதோறும் சராரியாக 10 லட்சம் பேர் பலியாகின்றனர். 50 கோடி பேர் பாதிக்கப்படுகின்றனர். கொசுக்களை ஒழிக்கவும் அது பரப்பும் நோய்களை கட்டுப்படுத்தவும் பட்ஜெட் ஒதுக்கீடுகள் ஆண்டுக்கு ஆண்டு எகிறுகின்றன.

இந்நிலையில், கொசுக்கடிக்கு பயப்பட வேண்டாம் என்ற சூப்பர் தகவலை சொல்லி மலேரியாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்திருக்கின்றனர் ஜெர்மனி ஆராய்ச்சியாளர்கள். பெர்லின் நகரில் உள்ள மேக்ஸ் பிளாங்க் தொற்றுநோய் தடுப்பு நிறுவனம்தான் இந்த ஆய்வை மேற்கொண்டு வெற்றியடைந்துள்ளது. ஆய்வு பற்றி விஞ்ஞானி கய் மேடஸ்சூகி கூறியதாவது:

அனோபிலிஸ் எனப்படும் பெண் கொசுதான் மலேரியாவை பரப்புகிறது. அது கடிக்கும்போது ஸ்போரோசாய்ட்ஸ் கிருமிகள் நம் உடலில் நுழைகிறது. இவை கல்லீரலுக்கு சென்று வேகமாக வளர்கின்றன. கிருமிகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கிறது. பின்னர் மலேரியாவை உருவாக்கும் மெரோசாய்ட்ஸ் என்ற கிருமியாக விஸ்வரூபம் எடுக்கிறது.

இனி இதற்கு பயப்படத் தேவையில்லை. கடைசிக்கட்டத்தில் மலேரியா கிருமிகளை ஒழிக்கும் ஆன்டிபயாடிக் மருந்துகளை கண்டறிந்துள்ளோம். வழக்கமாக மலேரியா பரவும் இடத்தில் உள்ள எல்லாரும் முன்கூட்டியே இந்த தடுப்பு மருந்து சாப்பிட வேண்டும். வழக்கம்போல கொசு கடிக்கும். கிருமி பரவும். கல்லீரலில் மெரோசாய்ட்ஸ் கிருமிகள் அதிகரிக்கும். ஆனாலும் பயப்பட தேவையில்லை. ரத்த செல்களில் அவை நுழையமுடியாதபடி ஆன்டிபயாடிக் மருந்து தடுத்துவிடும். மலேரியா வராது. கிளிண்டாமைசின், அசித்ரோமைசின் என்ற ஆன்டிபயாடிக் மருந்துகளை இதற்கு பயன்படுத்தியுள்ளோம். எலிகளை வைத்து நடத்திய ஆராய்ச்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது. தொடர்ந்து ஆராய்ச்சி நடக்கிறது. ஆய்வுக்கூட சோதனைகள் விரைவில் தொடங்கும்.