Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கோவையில் 1,750 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

Print PDF

தினமணி 02.09.2010

கோவையில் 1,750 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல்

கோவை, செப்.1: கோவையில் 1,750 கிலோ கலப்பட டீத்தூளை உதகை தேயிலை வாரிய அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனர்.

÷கோவையில் உள்ள பெரும்பாலான டீக் கடைகளில் கலப்பட டீத்தூள் பயன்படுத்தப்படுவதாக தேயிலை வாரியத்துக்கு புகார்கள் வந்தன.

இது குறித்து விசாரணையில் இறங்கிய தேயிலை வாரிய அதிகாரிகளுக்கு கோவை மணியகாரம்பாளையத்தில் கலப்பட டீத்தூள் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்படுவது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து, அந்தத் தொழிற்சாலையில் திடீரென தேயிலை வாரிய நிர்வாக இயக்குநர் அம்பலவாணன் தலைமையிலான அதிகாரிகள் சோதனை செய்தனர்.

÷அப்போது அந்தத் தொழிற்சாலையில் டீத் தூளுடன் ரசாயனப் பொருள்கள் கலப்படம் செய்யப்படுவது தெரிய வந்தது. அந்தத் தொழிற்சாலையில் இருந்த 1,700 கிலோ டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டது.

அதே போல், கணபதி பகுதியில் செயல்பட்ட மற்றொரு தொழிற்சாலையில் இருந்து 50 கிலோ கலப்பட டீத்தூளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

÷இதுகுறித்து தேயிலை வாரிய அதிகாரிகள் கூறியது: டீயின் நிறத்தையும், அடர்த்தியையும் அதிகரிக்க டீத்தூளில் கலப்படம் செய்யப்படுகிறது. இதற்காக பயன்படுத்தப்படும் ரசாயனமானது உடல் நிலத்துக்கு ஊறுவிளைவிக்கக் கூடும். கோவையில் செயல்படும் சில தொழிற்சாலைகள் உதகையில் இருந்து டன் கணக்கில் டீத்தூளை வாங்குகின்றன. அவற்றுடன் ரசாயன பொருள்களை சேர்த்து எடை அதிகரிக்கப்படுகிறது என்றனர்.