தினமலர் 03.09.2010
கலப்படம் செய்தவருக்கு சிறை
ஸ்ரீவில்லிபுத்தூர்:ஸ்ரீவி., ராஜாஜி ரோட்டில் ஆனந்தா பேக்கரி நடத்தி வருபவர் கனகராஜ். இதில் பங்குதாரர்களாக இளங்கோவன், சங்கர சுப்பிரமணியன், சக்தி மோகன் ஆகியோர் உள்ளனர். 2006 மே 25ம் தேதி ஸ்ரீவி., நகராட்சி உணவு பொருள் ஆய்வாளர் மகேஷ்வரன் பேக்கரியில் ஆய்வு நடத்தினார். அப்போது அங்கிருந்த ரோஸ்மில்க் மாதிரி எடுத்து கிண்டி அரசு பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைத்தார். அதில் கலப்படம் செய்திருப்பது தெரியவந்தது. இந்த வழக்கில் கனகராஜ்க்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்தும், பங்குதாரர்களை விடுதலை செய்தும் ஸ்ரீவி., கோர்ட் நீதிபதி ராஜகுமார் தீர்ப்பளித்தார்.