தினமலர் 06.09.2010
கொசு ஒழிப்பு பணி மும்முரம்
தேனி : வீரபாண்டி பேரூராட்சியில் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சின்னசாமி, சுகாதார ஆய்வாளர் ஜெகதீசன், பேரூராட்சி செயல் அலுவலர் நந்தகுமார் ஆகியோர் மேற் பார்வையில் கொசு ஒழிப்பு பணிகள் நடக்கிறது.
வீரபாண்டி பேரூராட்சி பகுதி கிராமங்களில் புகை போக்கி இயந்திரம் மற்றும் கைத்தெளிப்பான்கள் மூலம் கொசுக்கள் மற்றும் லார்வா ஒழிப்பு பணிகள் நடந்தன. பொதுமக்கள் கழிவுநீர் வடிகால்களில் குப்பைகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளை கொட்ட வேண்டாம். குடிநீரை காய்ச்சி குடிக்க வேண்டும் என செயல் அலுவலர் நந்தகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.