Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

கொசுவை ஒழிக்க மும்முரம் வீடுகளில் ஸ்டிக்கர் வார்டுதோறும் கமிட்டி

Print PDF

தினகரன் 08.09.2010

கொசுவை ஒழிக்க மும்முரம் வீடுகளில் ஸ்டிக்கர் வார்டுதோறும் கமிட்டி

சென்னை, செப். 8: கொசு ஒழிப்பில் பொதுமக்களின் பங்களிப்பு வேண்டும் என்பதற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நடந்தது. இதில் திரையரங்கு உரிமையாளர்கள், ஓட்டல் உரிமையாளர்கள், குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம், திரையரங்குகளில் ஒளிபரப்பு செய்ய, "கொசுக்களை கட்டுப்படுத்துவது நம் கையில்" என்ற ஸ்லேடை வெளியிட்டார்.

அதை திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன் பெற்றுக் கொண்டார். வீடுகளில் ஒட்டும் ஸ்டிக்கரை அமைச்சர் வெளியிட மேயர் மா.சுப்பிரமணியம் பெற்றுக் கொண்டார். கொசு ஒழிக்கும் பணியில் விழிப்புணர்வை ஏற்படுத்த மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான சுகாதார தூதுவர் என்ற அடையாள அட்டையையும் அமைச்சர் வெளியிட்டார். இந்த ஸ்டிக்கர்கள் சென்னையில் ஒரு லட்சம் வீடுகளில் ஒட்டப்படவுள்ளது.

வார்டுதோறும் கொசு ஒழிப்பு கமிட்டி

கொசு ஒழிப்பு பணியில் 240 ஊழியர்கள் இன்னும் 10 நாளில் புதிதாக நியமனம் செய்யப்படவுள்ளனர். திருமணகூடங்கள், கட்டுமானப் பகுதிகளில் தேவையில்லாமல் வரும் கழிவுகளை முறையாக அப்புறப்படுத்தாததால் கொசு உற்பத்தியாகிறது. இவற்றை முறையாக அப்புறப்படுத்தாத திருமணக் கூடங்களுக்கு மாநகராட்சி அபராதம் விதிக்கும்.

சென்னையில் 155 வார்டுகளிலும் கவுன்சிலர்கள் தலைமையில் மாநகராட்சி பொறியாளர் உள்ளிட்ட 10 பேர் அடங்கிய குழு விரைவில் அமைக்கப்படும். அந்த குழுவினர் மாதம் இருமுறை கூடி கொசு ஒழிப்பு மற்றும் வார்டுகள் மேம்பாடு பணிகள் குறித்து விவாதித்து ஆலோசனை வழங்குவார்கள். 155 வார்டுகளிலும் இந்த குழு அமைக்கப்படும் என்று மேயர்