Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

சோழிங்கநல்லூரில் 5 இடங்களில் கழிவுநீர் உந்துநிலையம்

Print PDF

தினகரன் 09.09.2010

சோழிங்கநல்லூரில் 5 இடங்களில் கழிவுநீர் உந்துநிலையம்

துரைப்பாக்கம், செப். 9: சோழிங்கநல்லூர் பேரூராட்சி மன்ற கூட்டம் அதன் தலைவர் அரவிந்த் ரமேஷ் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சம்பத் முன்னிலை வகித்தார். துணை தலைவர் உமாபதி வரவேற்றார். பொது நிதியில் இருந்து அண்ணா தெரு, பூபதிநகர் மெயின்சாலை மற்றும் குறுக்கு தெருக்களில் சிமென்ட் சாலை அமைப்பது, மினி காம்பாக்டர் லாரிக்கு எம்.எஸ் தகடுகளிலான 1100 லிட்டர் கொள்ளளவு கொண்ட 20 குப்பை தொட்டிகள் வாங்குவது, பாதாள சாக்கடை திட்டத்துக்காக குடிநீர் வடிகால் வாரியம் மூலம் பக்கிங்காம் கால்வாய், விஜிபி அவென்யூ அருகில், உழவன் கேணி குளம் அருகில் உள்ளிட்ட 5 இடங்களில் கழிவுநீர் உந்து நிலையம் அமைப்பது ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.